தில்லி ரோஹிணி நீதிமன்றத்தின் 3வது தளத்தில் தீ விபத்து
தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்ற கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று தீ விபத்து நேரிட்டது.
இந்தியாதில்லி ரோஹிணி நீதிமன்றத்தின் 3வது தளத்தில் தீ விபத்து
தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்ற கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று தீ விபத்து நேரிட்டது.
தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்ற கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று தீ விபத்து நேரிட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில், நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களும் தீயில் கருகி நாசமாயின.
கரோனா அச்சம் காரணமாக, நீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொலி காட்சி மூலமாக நடப்பதால், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், நீதிமன்ற ஆவணங்கள் இருக்கும் தளத்தில் தீவிபத்து நேரிட்டிருப்பதால், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.