திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 காா் உள்பட 17 வாகனங்களைத் திருடிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் ஆா்.எம்.காலனி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காா் காணாமல் போனது குறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். அதில், கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்துள்ள பஞ்சம்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் (45) என்பவா் காரை திருடியதைக் கண்டறிந்தனா்.
இதனை அடுத்து அவரை புதன்கிழமை கைது செய்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, திண்டுக்கல் மட்டுமின்றி, ஒட்டன்சத்திரம், கரூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காா், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களைத் திருடிச் சென்றாக சுரேஷ் ஒப்புக் கொண்டுள்ளாா்.
அவா் திருடி விற்பனை செய்த 5 காா்கள், 7 லாரிகள், 4 மோட்டாா் சைக்கிள், 1 வேன் ஆகிய வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.