கோப்புப்படம் 
இந்தியா

புதுவையில் 287ஐ எட்டியது கரோனா பாதிப்பு: புதிதாக 16 பேருக்குத் தொற்று

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

UNI

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்குப் புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். 37 வயது நபர் ஒருவர் அரசு மருத்துவக் கல்லூரில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தொற்று பாதித்து சுமார் 162 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாகப் பாதிக்கப்பட்ட 16 பேரில், 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 3 பேர் இங்குள்ள ஜிப்மரிலும், ஒருவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் இதுவரை 287 பேர் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 118 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டனர். ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT