தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 
இந்தியா

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம்: தில்லி சுகாதாரத்துறை தகவல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தில்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அவர் 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கும்பம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - மகரம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

SCROLL FOR NEXT