andhra corona victims 
இந்தியா

ஆந்திரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 497 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ANI

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 497 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும், கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கரோனா பாதிப்பு 10,331 ஆக உள்ளது. 

அனந்தபூரில் அதிகபட்ச கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன்பின்னர், கர்னூல், கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

தற்போது 5,423 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 4,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தல் கடையில் தீ விபத்து

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

நெல்லையப்பா் கோயில் வளாக கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT