இந்தியா

ஆந்திரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 7 பேர் பலி

ANI

ஆந்திரத்தில் மேலும் 704 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாகப் பாதிக்கப்பட்ட 704 பேரில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த 51 பேருக்கும், வெளி நாடுகளிலிருந்து 5 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 258 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணா மாவட்டத்தில் மூன்று பேர், குண்டூர் மற்றும் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

ஆந்திரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,595 ஆக உள்ளது. இதில் 7,897 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 6,511 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT