கோப்புப் படம் 
இந்தியா

கல்லூரி விடுதி குளியலறையில் குழந்தை பெற்றெடுத்த 18 வயது மாணவி

மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரி விடுதி குளியலறையில் 18 வயது கல்லூரி  மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ANI

துலே: மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரி விடுதி குளியலறையில் 18 வயது கல்லூரி  மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள சக்ரி நகரில் சாவித்ரிபாய் புலே ஆதிவாசி பெண்களுக்கான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் உள்ள குளியலறையில் குழந்தையொன்றின் அழுகுரல் கேட்டு விடுதி கண்காணிப்பாளர் சென்று பார்த்தபோது, அங்கிருந்த வாளி ஒன்றில் பிறந்த குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போது முதலில் யாரும் முன்வந்து உண்மையைக் கூறவில்லை. பின்னர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பெண் ஒருவரிடம் விசாரணை செய்ததில், அவர்தான் அந்த குழந்தையை பெற்றவர் எனத் தெரிய வந்துள்ளது.  

தற்போது அந்தப் பெண்ணும் குழநதையும் துலே மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தத் தகவல்களை சக்ரி காவல் நிலைய ஆய்வாளர் தேவிதாஸ் தாம்னே தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT