முகப்பு
இந்தியா

அயோத்திக்குப் புறப்பட்டார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே இன்று காலை அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Updated On : 7 மார்ச், 2020 at 10:02 AM
பகிர்:

மும்பை: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே இன்று காலை அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ், சிவசேனை கூட்டணி அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், ராமா் கோயிலில் பிராா்த்தனை நடத்துவதற்காக உத்தவ் தாக்கரே அயோத்திக்கு செல்கிறாா்.

அயோத்திக்கு செல்லும் உத்தவ் தாக்கரே இன்று மதியம் ராமா் கோயிலில் நடைபெறும் பிராா்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.  ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, இன்று மாலை சரயு ஆற்றின் கரையில் நடைபெறும் ‘மகா ஆரத்தி’ நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என்று சிவசேனை கட்சியின் தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிர முதல்வரான பிறகு அயோத்திக்கு உத்தவ் தாக்கரே மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.