இந்தியா

கரோனா வைரஸ்: ஜம்முவில் அனைத்துத் துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ANI


ஜம்மு: கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் (திட்டம்) ரோஹித் கன்சால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீரில் அனைத்து வகையான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறைகளையும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்வதாகவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT