இந்தியா

கரோனா: ஒடிஸாவிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்கு மூடல்

ANI


புவனேஸ்வர்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒடிஸா மாநிலத்திலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களையும், திரையரங்கு, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடங்களையும் மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிஸா சட்டப்பேரவையில் இன்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டார்.

ஒடிஸா மாநிலத்தில் தேர்வு நடைபெறும் கல்வி மையங்களைத் தவிர்த்து, அனைத்து கல்விமையங்களும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், கரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூடி வைக்க நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT