முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 492ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 492ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:16 PM
பகிர்:

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா வைரஸின் தாக்கத்தால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்தநிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471லிருந்து 492ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இந்தியர்கள் 451, வெளிநாட்டினர் 41 பேர் என மொத்தம் 492 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதேசமயம் கரோனால் இந்தியாவில் 9 பேர் இறந்த நிலையில் 37 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளத்தில் 95, மகாராஷ்டிரத்தில் 87, தில்லியில் 31, தமிழகத்தில் 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →