ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மகாராஷ்டிரத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.