காஷ்மீரில் 3 நாள்களுக்குப் பிறகு மீண்டும் செல்லிடப்பேசி சேவை
காஷ்மீரில் மூன்று நாள்களுக்குப் பிறகு செல்லிடப்பேசி சேவை மீண்டும் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் மூன்று நாள்களுக்குப் பிறகு செல்லிடப்பேசி சேவை மீண்டும் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த மே 6 ம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் தலைமை தளபதி ரியாஸ் நாயிகூஸ் கொல்லப்பட்டார். இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் மொபைல் போன் மற்றும் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் சேவைகள் மட்டுமே கடந்த மூன்று நாள்களில் இணைய வசதி இல்லாமல் செயல்பட்டு வந்தன.
Advertisement
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் செல்லிடப்பேசி சேவை மற்றும் இணையச் சேவைகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது.
மே 6 அன்று நிறுத்தி வைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வசதி மட்டும் இன்னும் சரியாகவில்லை என்று பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் சேவைகளின் சந்தாதாரர்கள் புகார் கூறியுள்ளனர்.