மகாராஷ்டிரத்தில் மேலும் 2940 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் கரோனா பாதிப்பு 1,18,447 ஆக உள்ளது. இவற்றில் 66,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு 3,583 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 148 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு இன்று மேலும் 2940 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582-ஆக உயர்ந்துள்ளது.
அதில் மும்பை தாராவியில் மட்டும் இன்று புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1478 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 57-ஆக உள்ளது.