இந்தியா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கரோனா; பலி 300ஐ தாண்டியது

IANS

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தில்லியில் கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இன்றும் பாதிப்பு 792 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்த பாதிப்பு 15,257 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பு 303 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது தில்லி மருத்துவமனைகளில் 7690 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT