இந்தியா

கரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது இந்தியா 

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் பலியானதை அடுத்து, கரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை விஞ்சியுள்ளது. 

சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், சீனாவில் தற்போதைய நிலவரப்படி, 82,995 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 78,291 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் பலி எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது. 

அதே நேரத்தில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,65,799 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,706 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 176 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா இன்று சீனாவை விஞ்சியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT