இந்தியா

பிகார் பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

DIN

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 55 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பிகாரில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கையாக தலா 7 மேஜைகள் போடப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் இடங்களில், அளவுக்கு அதிகமான ஆள்கள் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT