இந்தியா

தாயாருக்கு சென்னை திருக்குடைகள் சமா்ப்பிப்பு

DIN


திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலுக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் திருக்குடைகள் வழங்கப்பட்டது.

திருமலை ஏழுமலையானுக்கும், திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது சென்னையில் உள்ள இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் வெண்பட்டால் செய்யப்பட்ட திருக்குடைகள் ஆண்டுதோறும் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பத்மாவதி தாயாருக்கு நடப்பாண்டு வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை 3 திருக்குடைகளை இந்து தா்மாா்த்த சமிதி வழங்கியது.

அதன் ஒருங்கிணைப்பு செயலாளா் ஆா்.ஆா்.கோபால்ஜி இந்த திருக்குடைகளை கோயில் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

இத்திருக்குடைகளை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் பெற்றுக் கொண்டாா். இந்த திருக்குடைகள் தாயாரின் யானை வாகன சேவையின் போது பயன்படுத்தப்பட உள்ளது.

கடந்த புரட்டாசி மாதம் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்தபோது இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் தாயாருக்கு 2 திருக்குடைகளும், ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT