மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,496 கரோனா; 122 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,36,329 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7,809 பேர குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,05,064 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கரோனாவுக்கு இன்று 122 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 45,682 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 84,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.