இந்தியா

தில்லியில் கரோனா அதிகரித்ததற்கு மாசு முக்கிய காரணம்: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

DIN

தில்லியில் கரோனா அதிகரித்ததற்கு மாசு மிகப்பெரிய காரணம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், “கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நான் அதைப் பற்றியும் கவலைப்படுகிறேன். அதனைக் கட்டுப்படுத்த அனைத்துவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அடுத்த வாரம் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். 

மேலும் வரும் ஏழு முதல் 10 நாள்களில் பாதிப்புகள் குறையத் தொடங்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நான் நினைக்கிறேன். கரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்ததற்கு மாசும் ஒரு முக்கிய காரணம். அக்டோபர் 20 வரை நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைநகர் தில்லியில் கரோனா பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மட்டும் புதிதாக 7,332 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 104 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT