தாராவி: தொடர்ந்து 2-வது நாளாக ஒருவருக்கு மட்டுமே கரோனா
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் தொடர்ந்து 2-வது நாளாக ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் தொடர்ந்து 2-வது நாளாக ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு முதன்முதலாக பதிவாகத் தொடங்கியதிலிருந்து ஒருவருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவது இது 5-வது நாள்.
இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,621 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,296 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,535 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,001 பேர் குணமடைந்துள்ளனர், 60 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,18,380 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். மொத்தம் 46,034 பேர் பலியாகியுள்ளனர். 84,386 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.