முகப்பு
இந்தியா

கரோனா: தெலங்கானாவில் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

Updated On : 22 நவம்பர், 2020 at 2:05 PM
கரோனா: தெலங்கானாவில் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 873 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,526-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனாவால் பாதிக்கப்பட்டு 11,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 9,345 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 4 பேர் பலியானதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,430-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 1,296 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,50,453-ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைவோர் விகிதம் 94.03-ஆக உள்ளது. குணமடைவோர் விகிதத்தை தேசிய அளவோடு ஒப்பிடும்போது 93.7 சதவிகிதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.