முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வாகனம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 27 நவம்பர், 2020 at 3:05 PM
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: மருமகளே கொலையாளி (புகைப்படம் கோப்பிலிருந்து)
பகிர்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வாகனம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பலியானவர்கள் தேசிய பொறியியல் சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களது சடலங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Advertisement

எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.