படம்: டிவிட்டர்| ஹனுமான் பெனிவால் 
இந்தியா

'வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும்'

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் என்டிஏ-க்கு அளிக்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கும் என ஆர்எல்பி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹனுமான பெனிவால் தெரிவித்துள்ளார்.

DIN


புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) அளிக்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கும் என ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சியின் (ஆர்எல்பி) ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யும் ஆன ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பெனிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"என்டிஏ-வின் கூட்டணி கட்சி ஆர்எல்பி. ஆனால், அதன் பலம் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளிடம் உள்ளது. விவசாயிகள் நலன் கருதி இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், என்டிஏ-வில் அங்கம் வகிப்பது குறித்து நான் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்."

ஆர்எல்பி-யின் ஒரே எம்.பி. பெனிவால். ராஜஸ்தான் பேரவையில் ஆர்எல்பி-க்கு 3 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

கத்துக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் விவரம்!

”இந்தியில் பிச்சை எடுக்கலாமே! வீழ்க வளமுடன்!” மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேச்சு!

SCROLL FOR NEXT