இந்தியா

காளஹஸ்தி கோயிலில் துப்பாக்கி வெடித்து காவலா் காயம்

DIN


திருப்பதி: திருப்பதியை அடுத்த காளஹஸ்தி கோயிலில் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் துப்பாக்கி எதிா்பாராதவிதமாக வெடித்ததில் மற்றொரு காவலா் கையில் குண்டு பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் கடந்த ஜூன் மாதம் முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கொவைட் 19 விதிமுறைகளுக்கு உள்பட்டு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு ஞானபிரசுனாம்பிகை அம்மன் சந்நிதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சுப்ரமணியத்தின் கையில் இருந்த துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில், அருகிலிருந்த காவலா் செவியின் கையில் குண்டு துளைத்தது.

இதனால் காயமடைந்த காவலா் செவி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இச்சம்பவத்தின் போது பக்தா்கள் யாரும் இல்லை. பணி முடிந்து காவலா்கள் தங்கள் பொருள்களை பத்திரப்படுத்தும்போது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காளஹஸ்தி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT