இந்தியா

கர்நாடகம்: நாளொன்றுக்கு 1.5 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இலக்கு

PTI

கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் 1.4 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதாக அந்த மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் கே.சுதாகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் டிவிட்டரில் தெரிவித்ததாவது, 

கர்நாடகத்தில் ஒரேநாளில் 1,04,348 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 146 ஆய்வகங்களில் 55,690 ஆர்டி-பிசிஆர் மற்றும் பிற முறை சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், 30 மாவட்டங்களில் விரைவு ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்பட்டன. 

ஆனால், விரைவில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் கரோனா பரிசோதனை நடத்தப்படுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6-ம் தேதி மாலை வரை, ஒட்டுமொத்தமாக 6.57 லட்சம் பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9,461 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். அதேசமயம், 5.33 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

கரோனா உச்சபட்ச பாதிப்பில் பெங்களூரு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2.57 லட்சம் பேரும், அதைத்தொடர்ந்து மைசூரு 38,611 மற்றும் பல்லாரி 33,257 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT