இந்தியா

மெஹபூபாவுடன் ஃபரூக், ஒமர் அப்துல்லா சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லாவை மெஹபூபா முஃப்தி இன்று (புதன்கிழமை) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

DIN


ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லாவை மெஹபூபா முஃப்தி இன்று (புதன்கிழமை) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி செவ்வாய்க்கிழமை இரவு தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஸ்ரீநகரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லாவை இன்று சந்தித்தார் மெஹபூபா. 

இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒமர் அப்துல்லா சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தடுப்புக் காவலிலிருந்து விடுதலையான மெஹபூபாவை இன்று பிற்பகல் சந்தித்து நானும் தந்தையும் நலம் விசாரித்தோம். குப்கர் பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களுடன் நாளை பிற்பகல் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க ஃபரூக் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்." 

முன்னதாக பிடிபி கட்சித் தலைவர்களையும் மெஹபூபா சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT