சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் 
இந்தியா

'பாஜகவிலிருந்து ஏக்நாத் விலகியதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கும்'

பா.ஜ.க. மூத்தத் தலைவர் ஏக்நாத் கட்சே அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு மிகப்பெரிய காரணம் இருக்க வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

DIN

பா.ஜ.க. மூத்தத் தலைவர் ஏக்நாத் கட்சே அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு மிகப்பெரிய காரணம் இருக்க வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) அவர் கட்சியில் இணைய உள்ளார்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத், ''இந்த காலகட்டத்தில் பாஜகவிலிருந்து விலகுவதாக கண்ணீருடன் ஏக்நாத் அறிவித்துள்ளதற்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருக்கும். 40 ஆண்டுகளாக பாஜகவிற்காக உழைத்த நிலையில், தற்போது அவர் இந்த முடிவு எடுத்ததற்கு காரணங்கள் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கட்சே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தமது தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் அழிக்க முயல்வதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT