முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On : 24 அக்டோபர், 2020 at 2:58 PM
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:12 PM

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேவேந்திர ஃபட்னவீஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா பொதுமுடக்கம் தொடங்கிய நாள் முதல் நாள் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது கடவுளே என்னை ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.

எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருந்து மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை பாஜக நியமித்துள்ளது. தற்போது பிகார் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.