நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி 
இந்தியா

நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி

நாட்டில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 508 பேர் பலியாகியுள்ளனர்.

ANI


புது தில்லி: நாட்டில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 508 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று 40 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பதிவான நிலையில் இன்று மீண்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 43,893 பேராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79.90 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் பலியாகினர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,20,010 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,10,803 ஆக உள்ளது. இது நேற்றைய அளவை விட 15 ஆயிரம் குறைவாகும். கரோனா பாதித்தவர்களில் 58,439 பேர் குணமடைந்ததை அடுத்து, நாட்டில் இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 72.59 லட்சமாக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT