இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 95 காவல்துறையினருக்கு கரோனா பாதிப்பு

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 95 காவல்துறையினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில காவல்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 95 காவல்துறையினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்புக்கு உள்ளான காவல்துறையினரின் எண்ணிக்கை 26,395 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இதுவரை 283 காவல்துறையினர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக அளவு கரோனா பாதிப்புகளுடன் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடம் வகித்து  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT