இந்தியா

மும்பையில் மெட்ரோ தூணில் கிரேன் மோதி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்

DIN

மும்பையில் மெட்ரோ தூணில் கிரேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர். 

ஜோகேஸ்வரியிலிருந்து பாந்த்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு மெட்ரோ கிரேன் கட்டுப்பாட்டை இழந்து வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள அந்தேரி குண்டவாலி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே மெட்ரோ தூணில் மோதியது. கடுமையாக மோதியதில் கிரேன் இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது.

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண் கிரேன் பின்புற சக்கரங்களின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகிலிருந்த மேலும் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரேன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT