இந்தியா

கர்நாடகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கரோனாவுக்கு பலி

DIN

சிவ்மோகா: கர்நாடகத்தில் ஜனதா தல் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாஜி கெளடா கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலத்தின் சிவ்மோகா மாவட்டத்தில் பத்ராவதி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஜனதா தல் கட்சியை சேர்ந்தவருமான அப்பாஜி கெளடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைஅடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். 

67 வயதான அப்பாஜி கெளடா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில், அவருக்கு கரோனாவும் உறுதியானதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT