இந்தியா

இந்திய நிறுவனத்துடன் பப்ஜி நிறுவனம் பேச்சுவார்த்தை

DIN

சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. சீனா உடனான எல்லைப் பிரச்சனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பப்ஜி விளையாட்டின் தாய் நிறுவனமான தென் கொரியாவைச் சேர்ந்த பப்ஜி கார்பரேசன் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை விநியோகிக்க சீன நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைளை மதிப்பதாக தெரிவித்துள்ள பப்ஜி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு செயலியை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. சட்ட வரைமுறைகளுக்குள்பட்டு இந்தியாவில் செயலியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒரு புதிய உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் பப்ஜி நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் உறுதியாகும் நிலையில் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT