இந்தியா

கர்நாடகம், கேரளத்தில் கனமழைக்கு வாய்ப்பு

DIN

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோன்று கர்நாடகம் மற்றும் கேரளத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.

பல்வேறு இடங்களில் பெய்த பருவமழையின் காரணமாக அணைகள் நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி உள்கர்நாடக பகுதிகளில் செப்டம்பர் 10 முதல் 13-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளிலும், தெற்கு உள்கர்நாடகத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று கேரளத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்படுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT