வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 
இந்தியா

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் ஜெய்சங்கர்

ரஷியா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

DIN

ரஷியா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செப்டம்பர் 8-ஆம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றார்.

நேற்று (புதன்கிழமை) கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், பிராந்திய ஒற்றுமை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யையும் சந்தித்து பேச உள்ளார். இந்தியா - சீனா நாடுகளிக்கு இடையே லடாக் எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு சந்தித்து பேச உள்ளனர்.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த திங்கள் கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை சீன ராணுவம் மறுத்து வந்த நிலையில் ஆதாரத்துடன் இந்திய ராணுவம் அதனை நிரூபித்தது. மேலும் பயங்கர ஆயுதங்களை தாங்கியவாறு சீன ராணுவத்தினர் எல்லையில் இருந்த புகைப்படமும் வெளியானது.

இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை 6 மணிக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT