முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 311 காவலர்களுக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 4:08 PM
​மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் தொடர்ச்சியாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் பாதிப்புக்குள்ளான காவலர்களின் எண்ணிக்கை 19,385 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15,521 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 3,670 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மேலும், அங்கு கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 34,734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 24,97,51,114 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.