முகப்பு
இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 7:28 PM
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஹரிவன்ஷைத் தேர்வு செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, மனோஜ் குமார் ஜாவை மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில் ஹரிவன்ஷ் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

Advertisement

இதன்மூலம், ஹரிவன்ஷ் இரண்டாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராகியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் ஹரிவன்ஷ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.