பாட்னா: பிகாரில் செவ்வாயன்று மின்னல் தாக்கி 10 மாவட்டங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய் மதியம் பரவலாக கனமழை பெய்ததையடுத்து, மின்னல் தாக்கி 10 மாவட்டங்களில் 18 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்படி வைசாலி மாவட்டம் ராகவ்பூர் வட்டத்தில் நான்கு பேரும், ரோஹ்தாஸ், போஜ்பூர், கோபால்கஞ்ச் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், பாட்னா, பெகுசராய், அராரியா , சுபால் மற்றும் கைமூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னலுக்கு பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.