5 மாதத்தில் ரூ.39,403 கோடி எடுக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி 
இந்தியா

5 மாதத்தில் ரூ.39,403 கோடி எடுக்கப்பட்ட பிஎஃப் தொகை: தொழிலாளர் அமைச்சகம் தகவல்

கடந்த 5 மாதங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்து இதுவரை ரூ.39 ஆயிரத்து 403 கோடி வரை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

கடந்த 5 மாதங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்து இதுவரை ரூ.39 ஆயிரத்து 403 கோடி வரை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் திங்கள்கிழமை தொழிலாளர் அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்தது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்கள் மார்ச் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை, ரூ.39 ஆயிரத்து 403 கோடி  திரும்பப் பெற்றுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்தது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் ரூ.7 ஆயிரத்து 838 கோடியும், கர்நாடகத்தில் 5 ஆயிரத்து 744 கோடியும், தமிழகம் (புதுச்சேரி உட்பட) ரூ.4 ஆயிரத்து 985 கோடியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் டெல்லியில் ரூ.2 ஆயிரத்து 945 கோடி திரும்பப்பெறப்பட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு காரணமாக தொழிலாளர்களின் இன்னல்களை தீர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

கடந்த மே முதல் ஜூன் வரையிலான காலத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை 12 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT