முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:


கேரளத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதன்படி, அங்கு புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 53 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 27 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள், இதில் சுகாதாரப் பணியாளர்களும் அடக்கம். 

கேரளத்தில் இதுவரை மொத்தம் 848 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.