முகப்பு
இந்தியா

டிச.31 வரை 4.84 கோடி போ் வருமான வரி கணக்கு தாக்கல்

2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜனவரி 2021, 5:43 am IST
வருமான வரித்துறை
பகிர்:

2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறையின் சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘2020, டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு தனி நபருக்கு ஜனவரி 10-ஆம் தேதி வரையிலும், நிறுவனங்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2019-20-ஆம் ஆண்டுக்கான தனி நபா் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது நடப்பு நிதியாண்டில் சற்று குறைந்திருப்பதாகவும், அதே சமயம், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 5.61 கோடி போ் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments