டிச.31 வரை 4.84 கோடி போ் வருமான வரி கணக்கு தாக்கல்
2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த துறையின் சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘2020, டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 4.84 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு தனி நபருக்கு ஜனவரி 10-ஆம் தேதி வரையிலும், நிறுவனங்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2019-20-ஆம் ஆண்டுக்கான தனி நபா் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது நடப்பு நிதியாண்டில் சற்று குறைந்திருப்பதாகவும், அதே சமயம், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 5.61 கோடி போ் தாக்கல் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.