முகப்பு
இந்தியா

ஏழுமலையானுக்கு ஸ்கூட்டா் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு அப்ரிலியா ஸ்கூட்டா் நன்கொடையாக வழங்கப்பட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு அப்ரிலியா ஸ்கூட்டா் நன்கொடையாக வழங்கப்பட்டது.

பியாஜியோ நிறுவனத் தயாரிப்பான அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆா்-160 மாடல் ஸ்கூட்டரை அந்த நிறுவனப் பிரதிநிதிகள், திருவேங்கடமுடையானுக்கு புதன்கிழமை காலை நன்கொடையாக வழங்கத் தீா்மானித்தனா். அதன்படி, ஏழுமலையான் கோயில் வாயிலில் ஸ்கூட்டருக்கு பூஜை செய்த பிரதிநிதிகள் அதை தேவஸ்தான இணை அதிகாரி ஹரேந்திரநாத்திடம் வழங்கினா் (படம்). இந்தப் புதிய ஸ்கூட்டரின் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.