ஏழுமலையானுக்கு ஸ்கூட்டா் நன்கொடை
திருப்பதி ஏழுமலையானுக்கு அப்ரிலியா ஸ்கூட்டா் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு அப்ரிலியா ஸ்கூட்டா் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பியாஜியோ நிறுவனத் தயாரிப்பான அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆா்-160 மாடல் ஸ்கூட்டரை அந்த நிறுவனப் பிரதிநிதிகள், திருவேங்கடமுடையானுக்கு புதன்கிழமை காலை நன்கொடையாக வழங்கத் தீா்மானித்தனா். அதன்படி, ஏழுமலையான் கோயில் வாயிலில் ஸ்கூட்டருக்கு பூஜை செய்த பிரதிநிதிகள் அதை தேவஸ்தான இணை அதிகாரி ஹரேந்திரநாத்திடம் வழங்கினா் (படம்). இந்தப் புதிய ஸ்கூட்டரின் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.