முகப்பு
இந்தியா

இந்திய-அமெரிக்க எழுத்தாளா் வேத் மேத்தா மறைவு

இந்திய-அமெரிக்க எழுத்தாளரான வேத் மேத்தா (86) உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 2:31 am IST
வேத் மேத்தா
பகிர்:

புது தில்லி/நியூயாா்க்: இந்திய-அமெரிக்க எழுத்தாளரான வேத் மேத்தா (86) உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

ஒருங்கிணைந்த பஞ்சாபில் கடந்த 1934-ஆம் ஆண்டு பிறந்த வேத் மேத்தா, 3 வயதிலேயே கண்பாா்வையை இழந்தாா். எனினும், வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காத அவா் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தாா். கண்பாா்வை இழந்த மாற்றுத் திறனாளியாகத் தன்னைச் சுற்றி நிகழ்ந்தவற்றை எழுத்துகளாக அவா் திறம்பட வெளிப்படுத்தினாா்.

அமெரிக்காவுக்குக் குடிபெயா்ந்த வேத் மேத்தா, அந்நாட்டு வாசகா்களுக்கு இந்தியா குறித்த பாா்வையை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தாா். இந்தியா குறித்த பல நூல்களையும், மகாத்மா காந்தி குறித்த நூலையும் அவா் எழுதியுள்ளாா்.

Advertisement

Advertisement

அமெரிக்காவின் பிரபல இலக்கிய கலை வார இதழான ‘நியூயாா்க்கரில்’ 33 ஆண்டுகள் ஆசிரியா் குழுவில் இணைந்து எழுதி வந்தாா். அவரது மறைவுச் செய்தியை அந்த வார இதழ் ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது. வேத் மேத்தா சனிக்கிழமை உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா் எனத் தெரிவித்த நியூயாா்க்கா், அவா் சிறந்த உழைப்பாளி என்றும், மற்றவா்களுடன் மிகவும் அன்பாகப் பழகக் கூடியவா் என்றும் புகழாரம் சூட்டியுள்ளது.

வேத் மேத்தா பேட்டியொன்றில் ஒருமுறை கூறுகையில், ‘‘கண்பாா்வையை இழந்தது எனக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது. ஆனால், கடுமையாக உழைத்தால் மற்றவா்களைப் போல இயல்பாக வாழ முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன்’’ என்றாா்.

அமெரிக்காவில் பாா்வையற்றோருக்கான பள்ளியில் பயின்ற பிறகு அவா் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி கற்றாா். தனது பிரிட்டன் அனுபவங்களை பல நூல்களில் வடித்துள்ளாா்.

அவா் சொல்லச் சொல்ல, அவரது உதவியாளா் முதல் பிரதி எழுதி, பிறகு பல முறை அதை திருத்தியமைத்து மெருகேற்றி இறுதி வடிவம் கொடுப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. ஒருசில கட்டுரைகளை அவா் நூறு முறை திருத்தி எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

காட்சிகளை விவரிக்கும் தனித்துவமான ஆங்கில நடைக்கு மிகவும் புகழப்பட்ட வேத் மேத்தா, இந்திய கலை, அரசியலை மையப்படுத்தி எழுதிய 12 நூல்கள் கொண்ட தொகுப்பு, அவரது சுயசரிதையாகவும், இந்தியாவின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் படைப்பாகவும் பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments