முகப்பு
இந்தியா

விவசாயிகளின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவை திரட்டும் ராகுல்

மோடி அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தில் பொதுமக்களும் ஆதரவளித்து ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Updated On : 15 ஜனவரி 2021, 12:57 pm IST
விவசாயிகளின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவை திரட்டும் ராகுல்
பகிர்:


புது தில்லி: மோடி அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தில் பொதுமக்களும் ஆதரவளித்து ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதற்கும் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் விவசாயிகளின் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் அரசுக்கு எதிராக, தங்களது உரிமைகளை நிலைநாட்ட விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள், அதே வேளையில் மறுபக்கம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 

விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தில் மக்களும் இணைந்து பங்கேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments