தில்லியில் 4 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு
தில்லியில் புதிதாக 4,033 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லியில் புதிதாக 4,033 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,677 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,76,414 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,51,351 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 11,081 பேர் பலியாகிவிட்டனர்.
Advertisement
இன்றைய நிலவரப்படி 13,982 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.