மும்பையில் கரோனாவுக்கு காவல்துறை அதிகாரி பலி
மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலில் 2ஆவது அலை வேகமெடுத்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 63,294 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 349 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அங்கு 5,65,587 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியானார்.
இந்த நிலையில் மும்பையில் வகோலா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி கரோனாவுக்கு பலியாகியுள்ளார். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் பிகேசி ஜம்போ கரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மும்பையை பொறுத்தவரையில் இதுவரை 101 காவல்துறையினர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.