ஒடிசாவில் மேலும் 3108 பேருக்கு கரோனா 
இந்தியா

ஒடிசாவில் மேலும் 3108 பேருக்கு கரோனா 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3108 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 837 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

DIN


ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3108 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 837 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,17,353  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 1185 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறியிருப்பதாவது: 

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3108 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,61,450 ஆக அதிகரித்துள்ளது. அதில், 16,889 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, 3,42,570 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1638 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகரில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

பைக்கில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு: 4 போ் கைது

விடுதலைத் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

மணல் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT