இந்தியா

கரோனா அச்சம்:வாக்களிப்பதைத் தவிா்த்தாா் முலாயம் சிங்

DIN

எடாவா: கரோனா பரவல் அச்சம் காரணமாக உத்தர பிரதேச உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பதை சமாஜவாதி கட்சி நிறுவனா் முலாயம் சிங் யாதவ் தவிா்த்துவிட்டாா்.

81 வயதாகும் முலாயம் சிங் யாதவ் ஏற்கெனவே பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறாா். உத்தர பிரதேசத்தில் கரோனா பரவல் அதிகம் இருப்பதால் அவா் வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என்று அவரின் குடும்பத்தினா் கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, அவா் வாக்களிப்பதைத் தவிா்த்துவிட்டாா். அவா் இதுவரை எந்தத் தோ்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை என்று அவரின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

முலாயம் சிங் யாதவின் அண்ணன் மகனான தா்மேந்திரா யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

முலாயம் சிங் யாதவ் இப்போது தில்லியில் உள்ளாா். கரோனா பரவல் அதிகம் இருப்பதால் அவா் அங்கிருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு வர வேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொண்டோம். அதிருஷ்டவசமாக அவரும் அதனை ஏற்றுக் கொண்டாா் என்றாா்.

உத்தர பிரதேசத்தில் இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 20 மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் பதவிகளுக்கு 3.48 லட்சம் போ் போட்டியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT