தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர்
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தில்லி யாணா அரசு அறிவித்துள்ளது.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தில்லி யாணா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது,
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தடுப்பூசி வாங்குவதற்கான முயற்சியில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக 1.34 கோடி கரோனா தடுப்பூசிகளுக்கு நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
மேலும், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் விலையைக் குறைக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது மனிதக்குலத்திற்கு உதவ வேண்டிய நேரம் என்றும், இதில் லாபம் ஈட்டக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.